×

நான்கு வழிச்சாலையில் முட்செடிகள் அகற்றம்

சின்னாளபட்டி : தேசிய நான்குவழிச்சாலையில் பாலங்கள், சாலையின் ஓரம் உள்ள முட்செடிகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள தரைப்பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் ரயில்வே பாலங்களில் பக்கவாட்டு சுவர் மற்றும் கற்களின் இடையே முட்செடிகள் மற்றும் புல்செடிகள், மரக்கன்றுகள் முளைத்தவாறு இருந்தன தற்போது கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து இல்லாமல் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முட்செடிகள் மற்றும் மரக்கன்றுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காந்திகிராமம் மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் முட்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பணியாளர்கள் கூறுகையில் தற்போது கொரோனா ஊரடங்கால் வாகனங்கள் குறைவாக வருவதால் எங்களால் விரைவாக முட்செடிகளை அகற்ற முடிகிறது என்றனர்….

The post நான்கு வழிச்சாலையில் முட்செடிகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Chinnanapatti ,National Fourth Sanctuary ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...